விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் நலப் பெட்டி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி சுகாதாரத் துறை துணை இயக்குநர் ராம் கணேஷ் தலைமை வகித்தார். விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து, 22 கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு பெட்டகங்களை வழங்கினார்.
இதில், நகராட்சி ஆணையர் மாணிக்க அரசி , நகர் நல அலுவலர் (பொறுப்பு) பிரம்மநாயகம், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் எஸ்.எம். பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, வட்டார மருத்துவ அலுவலர் சபரீசன் தலைமையில், மருத்துவர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.