விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

 விருதுநகரில் சனிக்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 

 விருதுநகரில் சனிக்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 
 விருதுநகர் அல்லம்பட்டி, பாண்டிகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர் மனைவி சுப்புலெட்சுமி (58). இவருக்கும் கணவருக்கும் இடையே குடும்பப் பிரச்னை மற்றும் கடன் தொல்லை காரணமாக பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. 
 இந்நிலையில், சனிக்கிழமை மதியம் அல்லம்பட்டி ரயில்வே தண்டவாளப் பகுதிக்குச் சென்ற சுப்புலெட்சுமி செங்கோட்டை -மதுரை சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்தார். 
இதில் அவர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே சுப்புலெட்சுமி உயிரிழந்தார். 
 இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ரயில்வே போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com