விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்க கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் கிராமத்தின் எல்லையில் உள்ள திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதனால், கர்ப்பிணிகளும், முதியோரும், நோயாளிகளும் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சளி, இருமல், வாந்தி, பேதி உள்ளிட்ட நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, செட்டிக்குறிச்சி கிராமத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டியுடன் கூடிய சுகாதார வளாகம் அமைத்துத் தரவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.