அரசுப் பேருந்து மோதி ஒருவர் பலி

ராஜபாளையம் அருகே அரசுப் பேருந்து மோதி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார். 

ராஜபாளையம் அருகே அரசுப் பேருந்து மோதி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார். 
ராஜபாளையம் அருகே தேவிபட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (55). இவர் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காயல்குடி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது ராமநாதபுரத்திலிருந்து வந்த  அரசுப் பேருந்துமோதியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 
இவ்விபத்து குறித்து  இவரது மகன் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமரன், பேருந்து ஓட்டுநர் முருகன் (52) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com