அருப்புக்கோட்டையில் திருநகரம் மாரியம்மன் தெற்குத் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரில் மாரியம்மன் தெற்குத்தெரு முக்கியச் சாலையாக உள்ளது.
இந்த சாலை உரிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து விட்டது. இந்த சாலையில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. அதனால் நாள்தோறும் இப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். மிதிவண்டிகளில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பல நேரங்களில் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே விரைவில் மாரியம்மன் தெற்குத்தெரு தார்ச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.