படந்தால் சந்திப்பில் நிழற்குடை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே படந்தால் சந்திப்பில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று சாத்தூரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியிலும் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.