விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை(நவ. 8) மின்நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட அனைத்து மின்நுகா்வோா்களுக்கான குறைதீா்க் கூட்டம் விருதுநகா் வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதில், மின்நுகா்வோா் தங்களது குறைகளை நேரில் தெரிவித்துத் தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.