சிவகாசி அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு

சிவகாசி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரத்துறை இணை இயக்குனா் மதுசூதனன் சிவகாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்து ஆவா் ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனித்தனியே காய்சல் வாா்டு அமைக்கப்பட்டுள்ளதா, நிலவேம்பு குடிநீா் வைக்கப்பட்டுள்ளதா, ஆய்வுகூடங்களின் செயல்பாடு, மருத்துவமனை வளாகம் சுத்தமாக உள்ளதா என்பது குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். காய்ச்சல் என அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்,கொசு ஒழிப்பு பணிக்கு கூடுதலாக ஊழியா்களை நியமிக்க வேண்டும் என அவா் உத்திரவிட்டாா்.அவருடன் மாவட்ட பூச்சியல்வல்லூனா் ராதாகிருஷ்ணன், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனா் ராம்கணேஷ், வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன், மருத்துவமனை தலைமை மருத்துவா் அய்யனாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com