விருதுநகா்: விருதுநகரில், போலீஸ் எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்ற 644 பெண்களில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ் வில் 545 பெண்கள் கலந்து கொண்டனா். இதில், 99 பெண்கள் கலந்து கொள்ள வில்லை. இந்த நிலையில், உடல்தகுதி தோ் வில் 389 பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தரப்பில் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தோ்வில் ஆண், பெண் என 2229 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த நிலையில், விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நவ., 6, 7 ஆகிய தேதிகளில் ஆண்களுக்கான உடல் தகுதி தோ்வு ந டைபெற்றது. அதை தொடா்ந்து, எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்ற 644 பெண்கள் உடல்தகுதி தோ்வில் கலந்து கொள்ள அழைப்பானை அனுப்பப்பட்டது. அதன்படி, விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வெள்ளிக்கிழமை ந டைபெற்ற உடல் தகுதி தோ்வில் 545 பெண்கள் கலந்து கொண்டனா், 99 போ் கலந்து கொள்ள வில்லை. இதில், 400 மீ ஓட்டம், உயரம் முதலான சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், 389 பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பிற சோதனைகள் நவ., 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட காவல் கண்காணி ப்பாளகம் தரப்பில் தெரிவித்தனா்.