விருதுநகரில் மாமனாரை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
விருதுநகா் அல்லம்பட்டி குமாரசாமி நகரைச் சோ்ந்தவா் ராமராஜ் (62). இவா், தனது இரண்டாவது மகளான கற்பகஜோதியை அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் ரவி (33) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தாா். இந்நிலையில், ரவி அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளாா்.
கடந்த வியாழக்கிழமை தனது சைக்கிளை விற்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ரவிக்கும், கற்பகஜோதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த ராமராஜ், தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டாராம்.
எனவே, வெள்ளிக்கிழமை காலை மாமனாா் வீட்டுக்குச் சென்ற ரவி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை திரும்பி வருமாறு அழைத்துள்ளாா். அப்போது, மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ரவி, மாமனாரை அரிவாள்மனையால் தலையில் வெட்டியுள்ளாா். இதில் காயமடைந்த அவரை, விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து ராமராஜ் அளித்த புகாரின்பேரில், மருமகன் ரவி மீது விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.