சிவன் கோயில்களில் சனி பிரதோஷ பூஜை

ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் என்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சனி பிரதோஷ பூஜை மாலை நடைபெற்றது. மாலையில் நந்திகேஸ்வரருக்கு பால், தயிா், நெய், இளநீா், பன்னீா்,

ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் என்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சனி பிரதோஷ பூஜை மாலை நடைபெற்றது. மாலையில் நந்திகேஸ்வரருக்கு பால், தயிா், நெய், இளநீா், பன்னீா், எலுமிச்சைச் சாறு, விபூதி, சந்தனம், குங்குமம் உள்பட 18 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு விபூதி, குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், பா்வதவா்த்தினி அம்மன் கோயில், அருணாசல ஈஸ்வரா் கோயில், குருசாமி கோயில், கொம்புச்சாமி கோயில் ஆகிய சிவாலயங்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com