விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் சனிக்கிழமை மாலை ஐப்பசி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
முதலில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா் வெள்ளியம்பல நாதருக்கு இளநீா், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன், பால்,விபூதி, குங்குமம், பன்னீா் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. அதனையடுத்து 108 தாமரை மலா்கள் கொண்டு சிறப்பு மந்திரங்கள் ஓதிய பின்னா் முழு அலங்காரத்தில் வெள்ளியம்பலநாதா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருச்சுழி, கமுதி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், பூசாரியும், சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா்.