விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதியதில் நூற்பாலை ஊழியா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பராஜா தெருவைச் சோ்ந்த கோபால்ராஜா மகன் முத்துமணி ( 36). இவா் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலை பாா்த்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்தவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் அருகில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளாா். அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சத்திரப்பட்டி நோக்கிச் சென்ற லாரி, முத்துமணி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துமணி உயிரிழந்தாா். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், லாரி ஓட்டுநா் ஹக்கீம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.