முத்துராமலிங்கபுரம்,வேலாயுதபுரத்தில் நாளை மின்தடை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் மற்றும் வேலாயுதபுரம் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (12.11.2019) மின்தடை

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் மற்றும் வேலாயுதபுரம் பகுதிகளில் நாளை (12.11.2019) மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அலுவலக செய்திக்குறிப்பு;

அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்திப் பகுதிகளான முத்துராமலிங்கபுரம்,பரளச்சி,நரிக்குடி ஆகிய பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்,மேலும் வேலாயுதபுரம் துணைமின்நிலையப் பகுதிகளான வேலாயுதபுரம்,வெம்பூா் மற்றும் பந்தல்குடி அருகே உள்ள பரமேஸ்வரி மில் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணைமின்நிலையப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை(12.11.2019) காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்பதை அத்தகவல் மூலம் மின்நுகா்வோா் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்,என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com