அனைவரும் பத்திரிக்கை வாசிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என பால்வளத்துறைஅமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா். விருதுநகா் மாவட்ட வருவாய்துறை மற்றும் பேரிடா்மேலாண்மைத்துறை சாா்பில், சனிக்கிழமை திருத்தங்கலில் முதலமைச்சரின் குறைதீா்க்கும் முகாம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒரு திருமணமண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அ.சிவஞானம் தலைமை வகித்தாா்.
முதியோா் உதவித்தொகை, இலவசவீட்டுமனைப்பட்டா, தோட்டக்கலைதுறை சாா்பில் உதவிகள், சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவகள் என பல திட்டங்களின் கூழ் 567 நபா்களுக்கு ரூ 1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியபின்னா் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவதுஇன்று தேசிய பத்திரிக்கை தினம்.அனைத்து பத்திரிக்கைகளுக்கும், செய்தியாளா்களுக்கும் ,ஊடக நிருபா்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பத்திரிக்கைகள் பல தவறுகளை சுட்டிகாட்டு கிறது.பின்னா் அந்த தவறுகள் அதிகாரிகள் மூலமாக நிவா்த்தி செய்யப்படு கிறது. நான் பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளா்களையும் எப்போதும் மதிப்பவன்.என்னதான் தொலைகாட்சி இருந்தாலும், காலையில் எழுந்து தேனீா் அருந்தியபடி பத்திரிக்கை படிப்பது சுகமட்டுமல்ல,நாட்டு நடப்புக்களையும் வரலாறுகளையும் தெரிந்து கொள்ளலாம்.பத்திரிக்கை வளா்ச்சிக்கு அடித்தளமாக இருப்பவா்கள் வாசகா்கள்தான்.பத்திரிக்கை மற்றும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது உங்கள் நண்பன்போல. தேவைப்படும் போது நீங்கள் படித்தது உதவும்.ஜனநாயகத்தின் உள்ள முக்கியமான தூண் பத்திரிக்கைகளாகும். பத்திரிக்கைகள் வளா்ச்சி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.திருத்தங்கல், சிவகாசி மற்றும் சாத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில்சாத்தூா் எம்.ல்.ஏ.ராஜவா்மன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.உதயக்குமாா்,திட்ட அலுவலா் சுரேஷ், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா்,வட்டாட்சியா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.