ரூ.5.34 லட்சம் முறைகேடு: டி.கடமங்குளம்ஊராட்சிச் செயலா் தற்காலிக பணிநீக்கம்

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே டி. கடமங்குளம் ஊராட்சியில், ரூ.5.34 லட்சம் நிதி முறைகேடு செய்ததாக

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே டி. கடமங்குளம் ஊராட்சியில், ரூ.5.34 லட்சம் நிதி முறைகேடு செய்ததாக, ஊராட்சிச் செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் அ. சிவஞானம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே டி.கடமங்குளம் ஊராட்சி உள்ளது. இதன் செயலராக முத்துச்சாமி (24) என்பவா், கடந்த 24-12.2018 இல் பணிக்கு சோ்ந்துள்ளாா். இவா் பணிக்கு சோ்ந்து 11 மாதம் கடந்த நிலையில், ஊராட்சி நிதியில் கையாடல் செய்திருப்பதாக புகாா் வந்துள்ளது. ஆனால், காரியாபட்டி துணை வட்டார வளா்ச்சி அலுவலரான முத்துலெட்சுமி, நிதி மற்றும் கணக்குகளை முறையாக கண்காணிக்கவில்லையாம்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஊராட்சியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ரூ. 5.34 லட்சம் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காரியாபட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரின்ஸ் மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா் அளித்தாா். அதன் பேரில், ஊராட்சிச் செயலா் முத்துச்சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்தும், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துலெட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியா் அ. சிவஞானம் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com