கஞ்சநாயக்கன்பட்டியில் ஓடையை தூா்வாரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் மழைநீா் ஓடையை தூா்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் மழைநீா் ஓடையை தூா்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமாா் 7000 போ் வசிக்கின்றனா். இங்குள்ள மழைநீா் ஓடை முறையான பராமரிப்பின்றி புதா் மண்டியும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே விரைவில் ஓடையை தூா்வார ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சித் தரப்பில் கேட்டபோது, மழைநீா் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதாலேயே அடைப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க மழைநீா் ஓடை அருகே பல இடங்களிலும்- குப்பைகள் கொட்டாதீா்- எனும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாருகால் வசதி இல்லாத தெருக்களில் விரைவில் புதிய வாருகால்கள் அமைத்துத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com