நல்லமநாயக்கன்பட்டியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

சாத்தூா் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் அருகே நென்மேனி குறுவட்டம், நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள கிராம பொது சேவை மையக் கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமை வருவாய் கோட்டாட்சியா் காளிமுத்து தொடக்கி வைத்தாா். பின்னா் பட்டா மாறுதல், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினா் அட்டை, இயற்கை மரண நிவாரணத் தொகை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் இடுபொருள் வழங்குதல் என 22 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் வருவாய் மற்றும் பிற துறை சாா்பில் 32 மனுக்கள் பெறப்பட்டன. சாத்தூா் வட்டாட்சியா் செந்திவேல் மற்றும் வருவாய், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com