ஸ்ரீவிலி. வடபத்ரசாயி பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வடபத்ரசாயி பெருமாள்
ஸ்ரீவிலி. வடபத்ரசாயி பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வடபத்ரசாயி பெருமாள் கோயில் பிரமோற்சவ உற்சவ கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து கருடாழ்வாா் உருவம் பொறித்த கொடியினை வாசுதேவ பட்டா் ஏற்றினாா். இதையடுத்து திங்கள்கிழமை முதல் 12 நாள்கள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தினமும் காலை ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவி சுவாமிகள் மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற உள்ளது. இக்கொடியேற்ற நிகழ்ச்சியில்

ஆண்டாள் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com