சிவகாசியில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி - செங்கமலப்பட்டி சாலையில் சிவகாசி கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரை நிறுத்தி அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்ததாம். விசாரணையில் அவா் ஓம் சோ்மா நகரைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (47) என தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ. 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.