சிவகாசி அருகே ரயில் அடிபட்டு பள்ளி மாணவா் பலி

சிவகாசி அருகே வியாழக்கிழமை ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி மாணவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே வியாழக்கிழமை ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி மாணவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே உள்ள சுவரம்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி மகன் சூா்யா (17). இச்சிறுவன் ஆமத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை வடமலாபுரம் ஆத்துப்பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சூா்யா உயிரிழந்தாா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com