ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. ராஜபாளையம், தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.