விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே செவ்வாய்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு பெண்கள் உள்ளட மூன்று தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
சிவகாசி அருகே நதிக்குடியில் அபிரூபன் (53) என்பவருக்குச் சொந்த மான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுமாா் 50 பட்டாசு தயாரிக்கும் அறை உள்ளது.இந்நிலையில் செவ்வாய்கிழமை ராக்கெட் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் திருவேங்கிடபுரம் குருநாதன் மகன் கணேசன்(39), எஸ்.கொடிகுளம் பரமசிவம் மனைவி சுதா(32), ஆலங்குளம் ராஜ் மனைவி முருகசரஸ்வதி(35) ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட உராய்தல் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளா்களும் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படைவீரா்கள் மேலும் தீபரவாமல் இருக்க விபத்து நடைபெற்ற அறையில் தண்ணீரை பீச்சி அடித்தனா். காயமடைந்த மூவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.