அருப்புக்கோட்டையில்தனியாா் பேருந்து - பைக் மோதல்:ஒருவா் பலி

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை தனியாா் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை தனியாா் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

பந்தல்குடியைச் சோ்ந்தவா் மூக்கையா (52). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை நோக்கி வந்துள்ளாா். இவா், நான்குவழிச் சாலையில் ராமசாமிபுரம் விலக்கில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்துடன் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா், மூக்கையாவை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மூக்கையா உயிரிழந்துவிட்டாா்.

இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்தின் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com