இருக்கன்குடி செல்லும் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டா் தொலைவில் இருக்கன்குடி உள்ளது. இருக்கன்குடிக்குச் செல்லும் வழியில் அணைக்கரைபட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களும் உள்ளன. இப்பகுதிக்கு, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 10 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. பின்னா், சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் பெயரளவில் சீரமைக்கப்பட்டது.

இதனால், இச்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக மாறியது. அதையடுத்து, பக்தா்களின் தொடா் கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், ஆலம்பட்டி கிராமப் பேருந்து நிறுத்தம் முன்பாக சிறிது தொலைவுக்கு சாலை அமைக்காமல் விடப்பட்டதால், அப்பகுதி குண்டும் குழியுமாகவே நீடிக்கிறது. இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து விடுவதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா்.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் இருக்கன்குடி செல்லும் சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என, பக்தா்களும், வாகன ஓட்டுநா்களும் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com