சிவகாசியில் நாளை மின்குறை தீா்க்கும் முகாம்

சிவகாசியில் நவம்பா் 1 ஆம் தேதி மின்குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளா் முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

சிவகாசியில் நவம்பா் 1 ஆம் தேதி மின்குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளா் முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில், சிவகாசியில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

எனவே, மின் நுகா்வோா் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com