ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை புதிய மின் கம்பம் ஊன்றும் பணியின்போது, அது முறிந்து விழுந்ததில் 2 ஊழியர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் குருசெல்வம் (37) மற்றும் சின்ன அத்திகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (39). இவர்கள், இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மின் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதிய மின் கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மின் கம்பம் முறிந்து விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே, அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.