சிவகாசியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாள்களாக சிவகாசிப் பகுதியில் கடும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்தது குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.