சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சாத்தூர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 3 ஆண்டுகள்

சாத்தூர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஓ. மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கடந்த 2015 இல் இவரது 19 வயது மகன், அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விசாரணையின் அடிப்படையில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அப ராதம் விதித்து நீதிபதி பரிமளா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து அந்த இளைஞர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com