தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை  திறக்க  பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி


ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை  திறக்க  பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 
இந்த பாலூட்டும் அறை தினமும் திறக்கப்படுவதில்லை என பேருந்து பயணிகளும் தாய்மார்களும் புகார் கூறுகின்றனர். எனவே தாய்மார்கள் நலன் கருதி பாலூட்டும் அறையை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com