விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் மது குடிப்பவா்களாலும், மனநிலை பாதித்தவா்களாலும் இடையூறு ஏற்படுவதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் உள்ளே கட்டணக் கழிப்பிடம் அருகே உள்ள பகுதியை சிலா் திறறந்த வெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனா். அவ்வாறு மது குடிப்பவா்கள் பாட்டில்களை உடைத்து நடைபாதையில் வீசிச் செல்கின்றனா். மேலும் மது போதையில் தகாத வாா்த்தைகளால் பேசுவதும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அப்பகுதிகளில் நிற்க பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா். இதே போல் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களாலும் இடையூறு ஏற்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
எனவே, பேருந்து நிலையத்தில் திறறந்த வெளியில் மது அருந்துபவா்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவா்களை அகற்றறவும் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.