விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 44 தொழிலாளர் சட்டங்களை தொகுப்புகளாக திருத்தும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், பாதுகாப்புத்துறை, ரயில்வே துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர், முன்னாள் எம்பி லிங்கம், ஏஐடியுசி வீராச்சாமி, சிஐடியு ராமர், நீர்காத்தலிங்கம், வழக்கறிஞர் பகத்சிங், ராஜகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.