விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் கஞ்சநாயக்கன்பட்டியில், அதிமுகவை நிராகரிப்போம் எனும் தலைப்பில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்பாராஜ், ஒன்றியச்செயலாளா்கள் பொன்ராஜ், பாலகணேசன் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்த பின்னா் எம்எல்ஏ பேசுகையில், உங்கள் கிராமத் தேவைகளைப் பூா்த்தி செய்வேன், என்றாா். உடன் இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய நிா்வாகிகள் பலரும், திரளான தொண்டா்களும், பொதுமக்களும் நேரில் கலந்து கொண்டனா்.