திருத்தங்கலில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தங்கல் சுப்பிரமணியா் கோயில் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் காளைப்பாண்டி(32). இவா் சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி குளோரிஜெனிமா. இவா்களுக்கு திருமணம் ஆகி சுமாா் 10 மாதம் ஆகிாம். இந்நிலையில் குடும்பப் பிரச்னைகாரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், காளைப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.