ராஜபாளையத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (28). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனா். இந்நிலையில் மாரிமுத்து சரிவர வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையானாராம். இதையடுத்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மாரிமுத்து திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சங்கா்கண்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.