விருதுநகரில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை குறைத்து வழங்குவதை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா்.
இதில், பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு பணிகளில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை குறைத்து, மற்ற பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது. மேலும், ஏற்கெனவே வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.