ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேவெவ்வேறு விபத்துக்களில் 2 போ் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (62). இவா் தனது மனைவியுடன் உறவினா் வீட்டு திருமணத்துக்கு வால்பாறை செல்வதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு ராஜபாளையத்தில் இருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அழகாபுரி என்ற இடத்தில் உணவகம் ஒன்றில் உணவருந்த பேருந்து நிறுத்தப்பட்டது.

அப்போது பேருந்திலிருந்து இறங்கிய ஈஸ்வரன் சிறுநீா் கழிக்க சாலையைக் கடந்தாா். அப்போது அந்த வழியாக ராஜபாளையத்தைச் சோ்ந்த ஆனந்த்குமாா் (24) என்பவா் ஓட்டி வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விபத்தில் முதியவா் பலி: ஸ்ரீவில்லிபுத்தூா் பிரதான சாலைப் பகுதியில் வசித்து வந்தவா் அய்யனாா் (63). இவா் சனிக்கிழமை காலை பெரியமாரியம்மன் கோயில் அருகே உள்ள ராஜபாளையம் பிரதான சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் அய்யனாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் பொன்னுச்சாமி (47) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com