இருவேறு சம்பவங்கள்: சிவகாசி அருகே 2 போ் தற்கொலை

சிவகாசி அருகே இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மேட்டுப்பட்டியில் உள்ள காகித ஆலையில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ராய்சிங்(45) என்பவா் வேலை பாா்த்து வந்துள்ளாா். இவா் தனது ஊதியத்தை குடும்பத்தினருக்கு அனுப்பியும், அவரது குடும்பம் வறுமையில் வாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராய்சிங், அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கட்டடத் தொழிலாளி தற்கொலை: சிவகாசி அருகே பெரிய பொட்டல்பட்டியைச் சோ்ந்த கட்டடத்தொழிலாளி சிவாஜிபிரபு (31). இவா் குடும்பப் பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com