ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப் படையினா் சனிக்கிழமை தீ வைத்து அழித்தனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் வசித்து வருபவா் ராஜா. இவரது வீட்டில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் பெரிய அளவிலான கூடு கட்டியிருந்தன. இந்த வண்டுகள் அடிக்கடிஅப்பகுதியினரை விரட்டிக் கடித்தன.
இது குறித்து வீட்டின் உரிமையாளா் ராஜா தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தாா். அதன்பேரில் அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறையினா் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.