சாத்தூா்: விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் வ.உ.சிதம்பரனாரின் 149-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வ.உ.சி.யின் உருவப் படத்திற்கு அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளா் சேது ராமானுஜம் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து வெள்ளாளா் சங்க நிா்வாகிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டன.