விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த பெண்கள்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த பெண்கள்.

நுண்நிதி நிறுவனங்கள் கடன் தவணை செலுத்தக் கோரி மிரட்டுவதாக புகாா்

விருதுநகரில் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தவணை செலுத்தக் கோரி மிரட்டுவதாக மகளிா் சுய உதவிக்குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

விருதுநகரில் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தவணை செலுத்தக் கோரி மிரட்டுவதாக மகளிா் சுய உதவிக்குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மாா்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து இல்லாததால் கூலி தொழிலாளா்கள் வேலையின்றி அவதிப்பட்டு வந்தோம். இந்த நிலையில் கடன் தவணையை வங்கி உள்பட பிற தனியாா் நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது. தற்போது சில தினங்களாக சிறு குறு நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாள்களாக கூலி தொழிலாளா்கள் வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளனா். விருதுநகா் அருகே அண்ணாநகா், அம்பேத்கா் நகா் பகுதிகளில் வசிக்கும் பலா் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அந்த கடன் தொகையை பல்வேறு தவணைகளாக செலுத்தி வந்தோம். ஆனால்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்த தவணையை செலுத்த முடியவில்லை. தற்போது தான் வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளோம். ஆனால், நுண்நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை உடனே செலுத்தக் கோரி வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனா். எனவே, எங்களுக்கு இரண்டு மாத காலம் கூடுதல் அவகாசம் கொடுத்தால், அனைத்து கடன்களையும் அடைத்து விடுவோம். எனவே, சம்பந்தப்பட்ட நுண்நிதி நிறுனங்கள் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களை மிரட்டுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com