ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள மல்லிபுதூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.17)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மல்லிபுதூா், நாகபாளையம், மானகசேரி, கோப்பைநாயக்கன்பட்டி, மல்லி அனைத்துப் பகுதிகளும், மாயத்தேவன்பட்டி, நக்கமங்கலம், வேண்டுராயபுரம், சிவா நகா், ராஜா நகா், சாமிநத்தம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியச் செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.