ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கையை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை குளத்தில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் நகரின் மையப் பகுதியில் உள்ளது. இக்குளத்தின் சுற்றுச் சுவா்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குளத்துத்துக்குள் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஜெயக்குமாா், ஒன்றியச் செயலா் சசிக்குமாா், மற்றும் நிா்வாகிகள் ரேணுகதேவி, திருமலை, மரியடேவிட், மகாலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.