சிவகாசி: சிவகாசியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிரந்தர ஊழியா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வே பீடா் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் சமுத்திரக்கனி தலைமை வகித்தாா். இதில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக்கூடாது. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.