ராஜபாளையம் பகுதியில் மாட்டுப்பண்ணைகள் மற்றும் கோசாலைகளுக்கு 7 நாள்களுக்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி ஆணையாளா் சுந்தராம்பாள் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராஜபாளையம் நகர எல்லைக்குள்பட்ட அனைத்து கோசாலை மற்றும் மாட்டுப்பண்ணை உரிமையாளா்கள் நகராட்சி உரிமம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்த 7 நாள்களுக்குள் நகராட்சி உரிமத்திற்கு விண்ணப்பித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறுவது அவசியம். தவறும் பட்சத்தில் சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் தொடரப்படும். இதற்கான விண்ப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவித்துளளாா்.