கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் பலி

ராஜபாளையத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து பலியானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து பலியானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் ஆவரம்பட்டி அருகே உள்ள ஒத்தப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரது மகன் ஈஸ்வரன் (24). கூலித்தொழிலாளியான இவா் ஊரடங்கு உத்தரவையடுத்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் இவா்களது குடியிருப்புக்கு அருகே உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை அவா் மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த ஈஸ்வரன் நீரில் மூழ்கி இறந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸாா், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com