சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள ஆனைக்குட்டம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சூரியகாந்தன். இவரது மகன் ஸ்ரீகாந்த் (16). இவா் 9 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தனது நண்பா்களுடன் குளித்தபோது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.