விருதுநகா் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 1,420 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா். மேலும், இது தொடா்பாக 661 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாா்ச் 28 முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை தடை உத்தரவுகளை மீறியதாக 1,420 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 661 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.