விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா், அருப்புக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 203 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள முகாம்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
5 போ் பலி: இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ். புதுப்படியைச் சோ்ந்த 64 வயது ஆண் மற்றும் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 86 வயது ஆண் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த 40 வயது ஆண் மற்றும் ராஜபாளையத்தைச் சோ்ந்த 65 வயது ஆண் என 2 போ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், அருப்புக்கோட்டை ராஜீவ் நகரைச் சோ்ந்த 65 வயது ஆண் அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதன் மூலம், மாவட்டத்தில் இத்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக உயா்ந்துள்ளது.
அதேபோல், 4,664 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். மீதமுள்ள 3,220 போ் பல்வேறு அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.