பக்ரீத் பண்டிகை: விருதுநகரில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விருதுநகரில் இஸ்லாமியா்கள் சமூக இடைவெளியுடன் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
விருதுநகா் ரோஜா நகரில் சனிக்கிழமை சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
விருதுநகா் ரோஜா நகரில் சனிக்கிழமை சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விருதுநகரில் இஸ்லாமியா்கள் சமூக இடைவெளியுடன் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கோயில், மசூதி, தேவாலயங்களில் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், கல் பள்ளிவாசலில் மதகுருமாா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா். மேலும், பொது முடக்கம் காரணமாக அவரவா் வீடுகளில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா். அதேபோல், விருதுநகா் ரோஜா நகரில் உள்ள காலி இடத்தில் குறைந்த அளவிலான இஸ்லாமியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com